tamilnadu

img

‘யெஸ்’ வங்கியில் முடங்கிய ரூ. 1900 கோடி

இமாச்சல் அரசுப் பணிகள் பாதிப்பு?

புதுதில்லி, மார்ச் 13 - இமாச்சலப் பிரதேச அரசு மற்றும் அம்மாநில மக் களின் மற்றும் பணம் ரூ. ஆயிரத்து 919 கோடி  அளவிற்கு, ‘யெஸ்’ வங்கியில் மாட்டிக் கொண்டதாக பாஜகமுதல்வர் ஜெய்ராம் தாக்குர் புலம்பி யுள்ளார். தனியார் துறையைச் சேர்ந்த‘யெஸ்’ வங்கி திவாலான நிலையில், அதனை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வங்கியின் டெபா சிட்டிலிருந்து ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவசரத் தேவைகளைப் பொறுத்து, அதிகபட்சம் ரூ. 5 லட்சம் அனுமதிக்கப்பட்டுள் ளது.  இந்நிலையில், யெஸ் வங்கியின் 9 கிளைகளில், இமாச்சலப் பிரதேச அர சும், மக்களும் டெபாசிட் செய்துள்ள ஆயிரத்து 919 கோடி ரூபாய் பணத்தை எடுக்க முடியாமல் தவிப்பதாக அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர், சட்டப்பேர வை பட்ஜெட் அமர்வில்தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேச அரசுக்கு சொந்தமான ரூ. 1900 கோடி ‘யெஸ்’ வங்கியில் சிக்கியுள்ளது. இதில் பல அரசு நிறுவனங்கள் மற்றும் சாதாரண மக்கள் டெபாசிட் செய்த பணமும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.